பேசும் இயேசுவே!

திரு யுனி ஜோசப் - மதுரை

மதுரை திரு யுனி ஜோசப் அவர்கள் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கிய ”பேசும் இயேசுவே” என்ற குறுந்தகட்டிலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு யுனி ஜோசப் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்



எந்தன் விழிமலரே கன்னிமரிமகனே
கிறிஸ்மஸ் பாடல்
பாடல், இசை: யுனி ஜோசப்
பாடியவர்:


எந்தன் விழிமலரே கன்னிமரிமகனே
நான் ஆரிராரிரோ பாடுகிறேன்
அவனியில் வந்த அழகுரதமே
அன்பினைத் தந்த அமுதக் கனியே
ஆரிராரோ பாடுகின்றேன் ஆனந்தம் காண்கின்றேன்

நான் தேவக்குழந்தையைத் தாலாட்டுவேன் ஆரிரோ ஆரிரோ
நான் தெய்வப் பேரொளியைத் தினம் போற்றுவேன்
கண்ணை இமை மறைக்கும் ஒரு காட்சி உண்டோ
என் கண்ணே உன்னை மன்றாடி கேட்பேன்
வன்முறை தீமை களைந்திடு -நல்
வாழ்வினில் அமைதி தந்திடு

நீ நீலப்பூஞ்சோலை நிலவொளியோ
நீ நெஞ்சம் மகிழ்கின்ற விண்ணொளியோ
எந்தன் வாசல் திறந்துன் வாரும் தேவா
நானிலம் போற்றும் நாதனே - என்
நம்பிக்கை நீயே நாதனே

எல்லோரும் இணைந்த நாள் இன்று
மகிழ்ச்சிப் பாடல்
பாடல், இசை: யுனி ஜோசப்
பாடியவர்:


எல்லோரும் இணைந்த நாள் இன்று
நல்லோர்கள் மகிழ்ந்த நாள் இன்று
பாவம் போக்கும் நாள் என் பாரம் தீர்ந்த நாள்
ஆயன் அழைக்கும் குரலில் அன்பு மழையில் நனைகிறேன்

புதிய வாழ்வு பொலிவுடன் தரவே புறப்பட்ட என் தலைவா
புதிய மனிதனாய் நானும் வந்தேன் புனிதம் தந்திடு
ஜீவ ஜோதியே என் ஜீவன் நீயே
வந்தேன் உந்தன் சன்னிதி
வளமை இனிமை தந்திடவே

தேவ தேவா உன்னை நோக்கி நான் கெஞ்சுகிறேன்
உந்தன் முகமே என்னில் சாய்த்து என் குரல் கேட்டிடு
உண்மை தேவனே உனை என்றும் நம்பினேன்
வன்முறை தீமை ஒழித்திடவே வசந்தம் வாழ்வில் தந்திடவே